நயன்தாரா - விக்னேஷ் சிவன் விவகாரம் - இன்று விசாரணை அறிக்கை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

x

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டேன்லி அரசு மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள தீபாவளி தீக்காய சிறப்பு பிரிவு வார்டில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.

தீக்காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு ஆறுதல் கூறிய அமைச்சர், சிகிச்சை முறைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், விக்னேஷ் சிவன் நயன்தாரா விவகாரம் தொடர்பாக நாளை மாலை அறிக்கை வெளியிடபடும் என தெரிவித்தார்


Next Story

மேலும் செய்திகள்