கடற்படை தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்கும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

x

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, டிசம்பர் 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் ஆந்திரா மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

டிசம்பர் 4-ஆம் தேதி விஜயவாடாவில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர், அன்று மாலை விசாகப்பட்டினத்தில் இந்திய கடற்படை தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்கிறார். மேலும், காணொலி காட்சி வாயிலாக பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

டிசம்பர் 5-ஆம் தேதி திருப்பதியில் உள்ள ஸ்ரீபத்மாவதி மகிளா விஸ்வ வித்யாலயத்திற்குச் செல்லும் அவர், மாணவர்கள், ஆசிரியர்கள் எனப் பலருடன் கலந்துரையாடுகிறார்.


Next Story

மேலும் செய்திகள்