சுங்கச்சாவடியை உருட்டுக் கட்டைகளால் அடித்து நொறுக்கிய நவ நிர்மான் சேனா தொண்டர்கள் - மகாராஷ்டிராவில் பரபரப்பு

x

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள சின்னார் சுங்கச்சாவடியை மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா கட்சியினர் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரேவின் மகனான அமித் தாக்கரே, சுங்கச்சாவடியில் சுமார் அரை மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்ததாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த தொண்டர்கள் உருட்டுக் கட்டைகளால் சுங்கச் சாவடியை அடித்து நொறுக்கினர். இந்த சம்பவத்தில் சுங்கச்சாவடி ஊழியர்கள் காயம் அடைந்த நிலையில், சம்பவத்தின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது


Next Story

மேலும் செய்திகள்