பாசமாக "பாசிமாலை" அணிவித்த நரிக்குறவ மக்கள் - உடனே இறையன்பு செய்த நெகிழ்ச்சி செயல்..!

x
  • தாம்பரத்தில் நெடுஞ்சாலை துறை பணிகளை பார்வையிட வந்த தலைமைச் செயலாளர் இறையன்புவிற்கு நரிக்குறவர்கள் பாசிமாலை அணிவித்து மகிழ்ச்சியடைந்தனர்...
  • மாடம்பாக்கத்தில் கிழக்கு புறவழி சாலைக்காக நரிக்குறவ இன மக்களின் குடியிருப்புகள் அப்புறப்படுத்தப்பட்டு மாற்று இடம் வழங்க அரசு ஏற்பாடு செய்து வருகிறது...
  • அந்த பகுதிகளை ஆய்வு செய்ய வந்த இறையன்புவை சந்தித்த நரிக்குறவர்கள் தங்களுக்கு வீடு வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்...
  • நிச்சயம் கோரிக்கை நிறைவேற்றப்படும் என இறையன்பு உறுதியளித்த நிலையில், நரிக்குறவர் பெண் ஒருவர் பாசி மாலை எடுத்து இறையன்புவுக்கு அணிவிக்க முயன்றார்...
  • அப்போது ஆட்சியர் ராகுல் நாத்திற்கு மாலை அணிவிக்குமாறும் அவர் தான் தகுதியானவர் என்றும் இறையன்பு தெரிவித்த நிலையில், ராகுல் நாத்திற்கும், இறையன்புவிற்கும் பாசிமாலை அணிவிக்கப்பட்டது.
  • அதைப் பெற்றுக் கொண்ட இறையன்பு, மாலை எவ்வளவு என வினவிய நிலையில், தங்களை சந்திக்க வந்ததற்காக மகிழ்ச்சியில் மாலை போட்டதாக நரிக்குறவர்கள் தெரிவித்தனர்.
  • இருந்தபோதிலும் 200 ரூபாய் பணத்தை அவர்களுக்கு இறையன்பு கொடுத்ததால், நரிக்குறவர்கள் அதை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டனர்...

Next Story

மேலும் செய்திகள்