காதலனின் வீட்டில் கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணையில் வெளியான பகீர் தகவல்

x

திருவாரூர் மாவட்டத்தில் கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், கல்லூரி படிப்பை நிறைவு செய்ய பணமில்லாத மன உளைச்சலில் பெண் தற்கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் மேப்பலம் பகுதியை சேர்ந்தவர் நரேஷ் குமார். இவர் கல்லூரியில் படிக்கும் போது கமலாபுரம் நத்தம் பகுதியை சேர்ந்த சுஷ்மிதா எனபவரை காதலித்து வந்துள்ளார்.

இதில், மாணவி சுஷ்மிதா கர்ப்பம் அடைந்த நிலையில், பெற்றோர் திருமணம் செய்து வைக்க மறுத்ததால் வீட்டை விட்டு சென்ற சுஷ்மிதாவை, அவரின் காதலனுடன் ஊர்மக்கள் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்துள்ளனர்.

இந்நிலையில், நரேஷ்குமாரின் குடும்பத்தினருடன் வசித்து வந்த சுஷ்மிதா, தீடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதன் விசாரணையில், சுஷ்மிதா பி.எட் படித்து வந்ததாகவும், போதிய பண வசதி இல்லாததால் படிப்பை தொடர முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி, காதலனின் சகோதரனுக்கும் திருமணமாகாததால் தனிக்குடித்தனம் செல்ல நேர்ந்ததாகவும், இதனால் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்