சிக்குனா சின்னாபின்னமாயிடும் .. ஓடு..ஓடு.. தெறித்து ஒடிய டூவீலர் திருடர்கள்

x

குமாரபாளையம் அருகே இருசக்கர வாகனம் திருட முயன்ற இருவரை, தனியார் தொழிற்சாலை மேலாளர் ஒருவர் போராடி தடுத்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே அம்மன் நகர் பகுதியில், வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை இரண்டு பேர் திருட முயன்றுள்ளனர்.

இதனை, அருலிகிருந்த சாயத்தொழிற்சாலையின் சிசிடிவி காட்சிகளில் கண்ட தொழிற்சாலையின் மேலாளர் வெங்கடேசன் என்பவர், துணிச்சலாக செயல்பட்டு திருட முயன்ற இருவரையும் தடுத்துள்ளார்.

இதையடுத்து, திருடர்கள் இருவரும் தாங்கள் வந்த இரு சக்கர வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.

இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்