அதிக வட்டிக்கு ஆசைபட்ட மக்கள்.. "ஆனா அசலை காணவே வழி இல்ல" - பணத்தை பறிகொடுத்து கதறும் மக்கள்

x

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்து விட்டதாக, சோமசுந்தரம் என்பவர் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வரும் சோமசுந்தரம் என்பவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக, வாங்கிய பணத்திற்கு உரிய வட்டி தரவில்லை என கூறப்படுகிறது. அசல் தொகையையும் வழங்காமல் ஏமாற்றி வந்ததாக தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் தனித்தனியே புகார் மனுவை அளித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்