நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதல்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பெண்கள் பலி.. நாமக்கல் அருகே கோர விபத்து

x
  • நாமக்கல் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பெண்கள் உயிரிழந்தனர்.
  • நாமக்கல் மாவட்டம், மோர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி.
  • இவர் தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் காரில் பரமத்திவேலூர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
  • அப்போது எதிர்பாராதவிதமாக சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் ரவியின் மனைவி கவிதா உள்பட காரில் பயணித்த 5 பெண்கள் உயிரிழந்தனர்.
  • கவிதாவின் தம்பி மகள் லக்‌ஷனா என்ற 4 வயது சிறுமி மற்றும் கார் ஓட்டுநர் ரவி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்