திடீரென வீட்டுக்குள் புகுந்த 10 பேர்... அலறிய கணவன், மனைவி - சத்தம் கேட்டு ஓடிய பக்கத்து வீட்டினர்

x

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே கணவன் மனைவியை கட்டிப்போட்டுவிட்டு 18 சவரன் நகை மற்றும் 25 லட்ச ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

பள்ளிபாளையம் அருகே வெடியரசம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணி, விசைத்தறிக்கூட உரிமையாளரான அவரும், மனைவி பழனியம்மாளும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர் . அப்போது காரில் வந்த 10 பேர் கொண்ட மர்மகும்பல் மணி மற்றும் அவரது மனைவியை கட்டிப்போட்டு வீட்டிலிருந்த 25 லட்ச ரூபாய் மற்றும் 18 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

மணியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட எஸ்பி நேரில் விசாரணை மேற்கொண்டார். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்