மொத்தமாக வாரி சுருட்டிய நால்கே புயல் - 98 பேர் பலி.. பலர் மாயம் - அச்சத்தில் பிலிப்பைன்ஸ் மக்கள்

x

பிலிப்பைன்ஸில் வெப்ப மண்டல புயல் நால்கேவால் பலியானோர் எண்ணிக்கை 98ஆக அதிகரித்துள்ளது.

98 பேர் பலியான நிலையில், இதில் பாதிக்கு மேற்பட்ட இறப்புகள் பாங்சமோரோவில் பதிவாகியுள்ளன.

அத்துடன், 63 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 69 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

நால்கே புயலால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், மரங்கள் சாலைகளில் வேரோடு முறிந்து விழுந்து பல இடங்களில் போக்குவரத்து முடங்கியுள்ளது.

இதையடுத்து அந்நாட்டு அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர், வெள்ளத்தில் மூழ்கிய மாவட்டங்களை நேரில் ஆய்வு செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்