போதை தலைக்கேறி ஒரே சேட்டை..! 'குடி' மகனை காவல்நிலையத்திலே குளிப்பாட்டிய போலீசார்

x

நாகர்கோவிலில் மதுபோதையில் காவல் நிலையத்தில் அட்டகாசத்தில் ஈடுபட்ட நபரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தீபாவளி தினத்தன்று, கோட்டார் காவல் நிலையத்தை சேர்ந்த பெண் காவலர் ஒருவர் அண்ணா பேருந்து நிலையத்தில் பணியில் ஈடுபட்டிருந்துள்ளார்.

அப்போது, அங்கு ரகரையில் ஈடுபட்டிருந்த போதை ஆசாமி, பெண் காவலரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

பின்னர், காவல் நிலையம் அழைத்து வந்த விசாரித்ததில், தென்காசியை சேர்ந்த ஜான்சன் என்பது தெரிய வந்தது.

அவர், காவல் நிலையத்திலும் அட்டகாசத்தில் ஈடுபட்ட நிலையில், தூங்க வைத்த போலீசார், போதை தெளிந்தவுடன், பெண் காவலர் கொடுத்த புகாரின் பேரில், வழக்குபதிந்து கைது செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்