தோஷம் கழிப்பதாக கூறி பல்கா ஒரு தொகை...கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென மாயம் - நாகர்கோவிலில் பரபரப்பு

x

தோஷம் கழிப்பதாக கூறி வீட்டுக்குள் புகுந்து பணத்தை அபேஸ் செய்த மர்ம சாமியாரை நாகர்கோவில் போலீசார் தேடி வருகின்றனர்.நாகர்கோவில் நேசமணி நகர் பகுதியில் சாமியார் போல ஒருவர் காவி வேட்டி, சட்டை அணிந்தபடி வந்துள்ளார். அப்போது அங்குள்ள ஒவ்வொரு வீடாக சென்ற அவர், தோஷம் கழிப்பதாக கூறி இருக்கிறார். அப்போது ஒரு வீட்டின் முன்பாக நின்று பேசிக் கொண்டிருந்த சாமியார் திடீரென அங்கே இருந்த ஸ்கூட்டரில் ஏறி மாயமானார். அப்போது அந்த வீட்டின் உரிமையாளர் அலறியடித்தபடி வந்து பார்த்த போது அந்த மர்ம சாமியார் தன்னிடம் பணத்தை ஏமாற்றியது தெரியவந்தது. இதுகுறித்து அந்த நபர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மர்ம சாமியாரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்