பாஜக, காங். இடையே பயங்கர மோதல்மாறி மாறி கற்களை வீசி தாக்குதல் - நாகர்கோவிலில் பரபரப்பு..!

x
  • கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பாஜக காங்கிரஸ் தொண்டர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
  • நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
  • இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கற்களை வீசியும் கொடிக் கம்பங்களை உடைத்து எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
  • இது குறித்து தகவலறிந்த பிற பாஜக தொண்டர்களும் நாகர்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்தி தலைமையில் பாஜக அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  • இதனால் அரை மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
  • பின்னர் போலீசார் பாஜகவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
  • ஆனாலும் பாஜகவினர் கலைந்து செல்லாமல் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்