பெண் உதவி ஆய்வாளர் அறைந்த‌தாக புகார் அளித்த விவகாரம் -புகார் அளித்த பெண் காவலர் சஸ்பெண்ட் - சக போலீசார் அதிர்ச்சி

x
  • நாகர்கோயிலில் பெண் உதவி ஆய்வாளர் தாக்கியதாக கூறப்படும் விவகாரத்தில், புகார் அளித்த பெண் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
  • ஆயுதப்படை பிரிவில் பணிபுரியும் காவலர் சொர்ணவேணி விடுப்பு கேட்ட போது, உதவி ஆய்வாளர் வள்ளி செல்வி தாக்கியதாக கூறப்படுகிறது.
  • இதனால் காயம் ஏற்பட்டதால், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிசிக்கை சென்ற போது, உயர் அதிகாரிகளின் அழுத்த‌த்தால் சிகிச்சை அளிக்க மறுத்த‌தாகவும் சொர்ணவேணி குற்றம் சாட்டியுள்ளார்.
  • இதனிடையே, உதவி ஆய்வாளர் தாக்கியது குறித்து அவர் அளித்த புகார் குறித்து விசாரணை நடைபெற்று வந்த‌து.
  • விசாரணையின் இறுதியில் பெண் காவலர் சொர்ணவேணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
  • இது சக காவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்