ரவுடியை ஓட ஓட விரட்டி வெட்டிய மர்ம கும்பல்.. சென்னையில் பயங்கரம் | Chennai

x

சென்னையில் பிரபல ரவுடியை ஓட ஓட விரட்டி மர்ம கும்பல் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சென்னை கொடுங்கையூரில் வசித்து வந்தவர் ஆட்டோ ஓட்டுநர் கருப்பா என்கிற ரகுபதி. இவர் மீது ஏகப்பட்ட கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், முத்தமிழ் நகரில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் மர்மகும்பல் ரகுபதியை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், ரகுபதியை மீட்டு அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் வரும் வழியிலயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்