மாயமான இளம்பெண் மர்மமாக மரணம்! கை, கால் கட்டி சாக்கு பையில் சடலமாக மீட்பு - ஈரோட்டில் பரபரப்பு

x

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கல்லூரி மாணவி விவசாயக் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோபிசெட்டிபாளையம் அருகே கொங்கர்பாளையம் பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றில் தூர்நாற்றம் வருவதாக பொதுமக்கள் போலீசில் புகாரளித்தனர். இதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விவசாயக்கிணற்றில் இருந்து சாக்கு மூட்டை ஒன்றை கைப்பற்றினர். அதில், 20 வயதுடைய இளம்பெண் ஒருவரின் சடலம் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விசாரணையில், சடலமாக மீட்கப்பட்ட பெண் நாயக்கன்காடு பகுதி, கண்ணகி வீதியை சேர்ந்தவர் என்பதும், சில நாட்களுக்கு முன் கல்லூரி சென்ற தங்களின் மகளை காணவில்லை என பெண்ணின் பெற்றோர் போலீசில் புகாரளித்திருந்ததும் தெரியவந்துள்ளது. இந்நிலையில், மோப்பநாய் உதவியுடன் தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார், குற்றவாளிகளை தேடி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்