வீட்டின் முன் நின்ற காரின் டயர்களை கழற்றி சென்ற மர்ம நபர்கள் - மயிலாடுதுறையில் பரபரப்பு

x

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில், சொகுசு காரின் 4 டயர்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். சீர்காழி காந்தி பூங்கா எதிரில் வசிக்கும் முத்துராமன் என்பவர், சொகுசு கார் ஒன்றை வாங்கி, தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார். இந்நிலையில், நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள், காரின் 4 டயர்களையும் திருடிச் சென்றனர். கார் டயர்கள் திருடப்பட்டதால் அதிர்ச்சியடைந்த முத்துராமன், அதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, காரில் வந்து டயர்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்