பெட்ரோல் பங்கையும் விட்டு வைக்காத மர்மநபர்கள்... ஊழியர்கள் தூங்கும் போது நடந்த பயங்கரம்

x

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, பெட்ரோல் பங்கில் நுழைந்த மர்மநபர்கள் இருவர், பையில் வைத்திருந்த ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மற்றும் 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்போனை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. வத்திராயிருப்பு சாலையில் இயங்கும் பெட்ரோல் பங்கில், அதிகாலை நேரத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், ஊழியர்கள் தூங்கிக் கொண்டிருந்த சமயத்தைப் பயன்படுத்தி, பணப்பையையும், செல்போன் ஒன்றையும் திருடிச் சென்றனர். இதுதொடர்பான புகாரின் பேரில், மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்