நெல்லை அருகே மினி பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே நவ்வலடிக்கு மினி பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு பயணிகளை இறக்கிவிட்டு, நல்வலடி பெட்ரோல் பங்க் அருகே பேருந்தை நிறுத்தி விட்டு, ஓட்டுநர் மற்றும் நடத்துநர் சாப்பிட சென்றுள்ளனர். அப்போது, மர்ம நபர்கள் பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். இதில் பேருந்து உள்புறம் பெரும்பகுதி எரிந்து விட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x

நெல்லை அருகே மினி பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே நவ்வலடிக்கு மினி பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று இரவு பயணிகளை இறக்கிவிட்டு, நல்வலடி பெட்ரோல் பங்க் அருகே பேருந்தை நிறுத்தி விட்டு, ஓட்டுநர் மற்றும் நடத்துநர் சாப்பிட சென்றுள்ளனர்.

அப்போது, மர்ம நபர்கள் பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர்.

இதில் பேருந்து உள்புறம் பெரும்பகுதி எரிந்து விட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Next Story

மேலும் செய்திகள்