மனித வெடிகுண்டாக வங்கிக்குள் புகுந்த மர்ம நபர் .. அலறியடித்து ஓட்டம் பிடித்த பொதுமக்கள்... - தெலங்கானாவில் பரபரப்பு

x

தெலங்கானா மாநிலத்தில், வங்கிக்குள் புகுந்து பணம் கேட்டு மிரட்டிய நபரை போலீசார் கைது செய்தனர். மேட்ச்சல் மாவட்டம் ஜி.டி. மெட்லா நகரில் கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு புகுந்த நபர் ஒருவர், போலி வெடிகுண்டை காண்பித்து, தனக்கு உடனடியாக 2 லட்சம் ரூபாய் கொடுக்கத் தவறினால், வெடிகுண்டை வெடிக்க செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதையடுத்து, வங்கியில் இருந்த வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் அந்த நபரை மடக்கி பிடித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த நபரை கைது செய்தனர். ஜீடிமெட்டிலா பகுதியை சேர்ந்த கிரேன் ஆபரேட்டர் சிவாஜி என்பது தெரியவந்தது. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்