பஸ்சில் இருந்து தூக்கி வீசப்பட்ட மர்ம பொருள்... வங்கி அருகே திடீரென வெடித்து சிதறியதால் அதிர்ச்சி... குமரியில் பரபரப்பு

x

மார்த்தாண்டத்தில் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட மர்ம பொருள் வெடித்ததில் தனியார் வங்கி பெயர் பலகை மற்றும் 2 சக்கர வாகனம் சேதம் அடைந்தது.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் வடக்கு தெரு பகுதியில் தனியார் வங்கி மற்றும் அதன் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அவ்வழியாக சென்ற தனியார் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட மர்ம பொருள் ஒன்று தனியார் அருகே விழுந்து வெடித்துள்ளது. அதில் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த 2 சக்க வாகனம் சேதம் அடைந்ததுடன் வங்கியின் பெயர் பலகையும் பெயர்ந்து விழுந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மார்த்தாண்டம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது போன்று இந்த சம்பவம் நடந்திருக்கலாமோ என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்