அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள்!பொன்னேரி அருகே பரபரப்பு

x

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே அம்பேத்கர் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெடுவரம்பாக்கம் கிராமத்தில் உள்ள அம்பேத்கர் சிலையின் முகம் மற்றும் விரல் பகுதிகள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன.

தகவலறிந்து அந்தப் பகுதியில் திரண்ட கிராம மக்கள் போலீசார் மற்றும் வருவாய்த்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

சிலை சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக 2 இளைஞர்களைப் பிடித்து விசாரணை நடத்திவரும் போலீசார், கண்காணிப்புப் பணியிலும் ஈடுபட்டு உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்