சாலையில் நடந்து சென்றவர்களை சுட்டு கொன்ற மர்ம நபர் - குலைநடுங்க வைக்கும் சம்பவம்

x

பிலடெல்பியா நகரத்தில் சாலையில் நடந்து சென்றவர்கள் மீது, இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி, 2 சிறுவர்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். இருபதிற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதற்கிடையே, துப்பாக்கிச் சூடு நடத்தியதாக 40 வயது மதிக்கத்தக்க நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நபர் அணிந்திருந்த புல்லட் துளைக்காத கவச உடையையும், இரண்டு துப்பாகிகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் ஒரு சந்தேக நபரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்