வீடு புகுந்து வடமாநிலத்தவர்களை பட்டாக் கத்தியால் தாக்கிய மர்ம கும்பல் - சென்னையில் பரபரப்பு

x

சென்னை ஆவடி அருகே வடமாநில தொழிலாளர்கள் வீட்டின் உள்ளே புகுந்த மர்ம கும்பல், 2 பேரை பட்டாக் கத்தியால் வெட்டிவிட்டு 4 செல்போன்களை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மேற்குவங்கத்தை சேர்ந்த வடமாநில தொழிலாளர்கள் 20க்கும் மேற்பட்டோர் மோரை கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். இந்நிலையில், இரு சக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், தண்ணீர் கேட்பது போல், வடமாநிலத் தொழிலாளர்களின் வீட்டுக்குள் புகுந்து, சலீம், அஷிபுல் ரஹ்மான் ஆகிய இருவரையும் பட்டாக் கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு, வீட்டில் இருந்த 4 செல்போன்களை எடுத்து சென்றனர்.இதனையடுத்து, காயம் அடைந்த இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்