ஊராட்சி மன்ற தலைவர் சாவில் மர்மம்... கிராம மக்கள் மறியல்.. போலீசார் குவிப்பு

x

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஊராட்சி மன்ற தலைவர் மர்மமான முறையில் உயிரிழந்தால், பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. இதனால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கிழவனேரி கிராம ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திக்கிற்கு சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவருக்கும் காரியாபட்டி பாண்டியன்நகரைச் சேர்ந்த வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், அவர் வீட்டில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட நிலையில் மீட்கப்பட்டார்.இதனால் அந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்தனர். கார்த்திக் இறந்ததற்கு காரணமான நபரை கைது செய்யக் கோரி, காரியாபட்டி - கள்ளிக்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்