மியான்மர் ராணுவத்தின் வெறியாட்டம்... சொந்த நாட்டு மக்கள் மீதே குண்டு வீச்சு - துடிதுடித்து பலியான 20 குழந்தைகள்

x
  • மியான்மர் ராணுவத்தின் வெறியாட்டம்... சொந்த நாட்டு மக்கள் மீதே குண்டு வீச்சு - துடிதுடித்து பலியான 20 குழந்தைகள்
  • மியான்மரின் வடமேற்கு சாகெய்ங் பிராந்தியத்தில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த கிராமத்தைக் குறி வைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 133 பேர் கொல்லப்பட்டனர்.
  • இதில் 20 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
  • மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
  • பா ஸி கிய் என்ற அந்த கிராமத்தினர், ராணுவ ஆட்சிக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள மக்கள் தற்காப்புப் படை என்ற கிளர்ச்சிக் குழு அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்றனர்.
  • விழாவின் போது நடனமாடிய பள்ளிக்குழந்தைகளும் இதில் உயிரிழந்துள்ளனர்.
  • மியான்மர் ராணுவத்தின் இந்த கொடூர நடவடிக்கையை ஐநாவும் உலக நாடுகளும் கடுமையாக எதிர்த்துள்ளன.

Next Story

மேலும் செய்திகள்