"அத்திப்பட்டி மாறி என் ஊரே அழிஞ்சு போச்சு" "எல்லாருமே விதவையாக நிக்கிறோம்" "என் குடும்பத்துல 4 பேரும் செத்துட்டாங்க"

x

எக்கியார் குப்பம்... தமிழகத்தை உலுக்கிய விஷச்சாராய மரணத்தால் விம்மி நிற்கிறது.. காலையில் மீன்பிடிக்க சென்று, கிடைக்கும் தொகையில் குடும்பம் நடத்தும் குடும்பங்களை கொண்ட மீனவ குப்பம்.. இன்று சோகமாக காட்சியளிக்கிறது விஷச்சாராயத்தால்... எக்கியார் குப்பத்தில் மட்டும் 10 பேர் விஷச்சாராயத்தால் உயிரிழந்திருக்கிறார்கள்.கிராம மக்களிடம் பேசினால் கள்ளச்சாராயம் தங்கள் குடும்பங்களை கருவறுக்கிறது என கண்ணீர் வடிக்கிறார்கள். கிராமத்தில் உயிரிழந்த தரணிவேலுவின் மனைவி முனியம்மாள், குடும்பத்தில் 4 உறவுகளை இழந்துவிட்டதாக வேதனை கண்ணீர் வடிக்கிறார்.

  • 10 லட்சம் ரூபாய் எதற்கு..? என ஆதங்கம் தெரிவிக்கும் முனியம்மாள், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனையை கொடுக்க வலியுறுத்துகிறார்.
  • முனியம்மாள், தரணிவேல் மனைவி
  • கிராமத்தில் விஷச்சாராயத்திற்கு ஆண்களை பறிகொடுத்துவிட்டு வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வது என தவிப்பதாக வேதனைப்பட்டார் தரானிவேல் மருமகள் கோமதி...
  • 4 பேரை இழந்துவிட்டோம், யாருக்காக அழ என கண்ணீர் சிந்தும் தரணிவேலுவின் மகள், கிராமத்தில் சிறார்களும் கஞ்சா புகைப்பதாக கலங்கினார்.
  • சரண்யா, தரணிவேல் மகள்
  • எங்கும் சாராய கவர்களை பார்க்கலாம் என வேதனை தெரிவிக்கும் கிராம மக்கள், பெண்களை விதவைகளாக்கும் விஷசாராயத்திற்கு அரசு முடிவுகட்ட வேண்டும் என வலியுறுத்துகிறார்கள்

Next Story

மேலும் செய்திகள்