தன் மாற்றுத்திறனாளி மகனின் நீண்டநாள் கனவு நிறைவேறியது! - போலீசுக்கு கண்ணீரோடு நன்றி சொன்ன தாய்

x

கேரள மாநிலம் இரிஞ்ஞாலக்குடா பகுதியைச் சேர்ந்தவர் 7 ஆம் வகுப்பு மாணவர் ஸ்ரீஹரி. மாற்றுத்திறனாளியான இவர், காவல்துறை ஜீப்பில் பயணிக்க வேண்டும் என தனது தாயாரிடம் நீண்ட நாட்களாக கூறி வந்துள்ளார். இது அப்பகுதி காவல்நிலையத்தின் உதவி ஆய்வாளர் அனிலின் கவனத்திற்கு செல்ல, அவர் ஸ்ரீஹரியை ஜூப்பில் ஏற்றிக்கொண்டு சிறிது தூரம் பயணித்தார். இதனால் ஸ்ரீஹரியும், அவரது தாயாரும் மகிழ்ச்சியடைந்த நிலையில், ஸ்ரீஹரியின் ஆசையை நிறைவேற்றிய போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்