"என் பையன் போய் சேந்துட்டான்.." -"அவனை நம்பி தான் இருந்தோம்" - மகனை இழந்த தந்தை கண்ணீர்

x

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக காவிரி ஆற்றுக்கு சென்ற கல்லூரி மாணவர்கள் 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த‌து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எடப்பாடி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 10 பேர், நண்பரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக, சங்ககிரி அருகே உள்ள கல்வடங்கம் காவிரி ஆற்றங்கரைக்கு சென்றுள்ளனர். அவர்கள் நீரில் குளித்து கொண்டாடிக் கொண்டிருந்த நிலையில், மணிகண்டன், முத்துசாமி, பாண்டியராஜன் மற்றும் மணிகண்டன் ஆகிய 4 பேர் நீரில் மூழ்கியுள்ளனர். தகவலறிந்து சென்ற தீயணைப்புத்துறையினர், படகுகள் மூலம் தேடி, 4 மாணவர்களின் உடல்களையும் மீட்டனர். உடல்களைப் பார்த்து அவர்களது பெற்றோர் கதறி அழுத‌து கண்கலங்க செய்த‌து. மாணவர்கள் மூழ்கியதாக தகவல் பரவியதால் ஏராளமானோர் குவிந்த‌தால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே, உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்