"அமெரிக்கா வரை புகழ்பெற்ற என் சொந்த கிராமம்" - அமைச்சர் துரைமுருகன் நெகிழ்ச்சி

x

தனது சொந்த கிராமமான காங்குப்பம் நகரம்போல் மாறிவிட்டதாகவும், மகாதேவமலை சாமியாரால் அமெரிக்கா வரை புகழ்பெற்றுள்ளதாகவும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

வேலூர் கே.வி.குப்பம் அடுத்த காங்குப்பம், தி.மு.க அமைச்சர் துரைமுருகனின் சொந்த கிராமமாகும். இங்கு 15 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் மற்றும் குடியிருப்பை அமைச்சர் துரைமுருகன் திறந்துவைத்தார். அப்போது பேசிய அவர், குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மோர்தானா அணையின் கால்வாய்களை சீரமைக்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தனது கிராமம் தற்போது நகரம் போல் மாறிவிட்டதாகவும், மகாதேவமலை சாமியாரால் அமெரிக்கா வரை புகழ் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். சாமியார் கேட்டுக்கொண்டதால், கே.என்.நேரு கோயிலுக்கு தேர் செய்து கொடுத்ததாகக்கூறிய துரைமுருகன், மகாதேவமலையில் தேரை பார்வையிட்டு விபூதி சித்தரை சந்தித்து பேசினார். இந்நிகழ்வின் போது அவரது மகன் கதிர் ஆனந்த் எம்.பி. உடனிருந்தார்.


Next Story

மேலும் செய்திகள்