ஒரே நேரத்தில், வெவ்வேறு பகுதிகளில் அரங்கேறிய கொலைகள் - தூத்துக்குடியில் பரபரப்பு

x

தூத்துக்குடியில் ஒரே நேரத்தில், வெவ்வேறு பகுதிகளில் இரண்டு பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி ராஜகோபால் நகர் பகுதியை சேர்ந்தவர் பெரிய நாயகம்.

பணி முடித்து விட்டு வீடு திரும்பிய இவரை, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

அதேபோல் சின்னகண்ணு புரம் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் என்பவரை, இருசக்கர வாகனம் விற்பனை செய்ததில் ஏற்பட்ட தகராறு காரணமாக, சரவணன் என்பவர் அடித்து கொலை செய்துவிட்டு தப்பியுள்ளார்.

இந்த கொலை சம்பவங்களால் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், கொலை சம்பவங்களில் ஈடுபட்டவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்