கல்யாண விழாவில் ரசகுல்லாவிற்காக நடந்த கொலை - அதிர்ச்சி சம்பவம்

x

உத்திரபிரதேசத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் ரசகுல்லாவிற்காக இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆக்ராவில் கந்தௌலியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகனுக்கு திருமண நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்ச்சியில் விருந்தினர்களுக்கு ரசகுல்லா வழங்க குடும்பத்தார் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த ரசகுல்லாவை பெறுவதில் மணமகன் தரப்பிற்கும், மணமகள் தரப்பிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றவே அங்கிருந்த ஒருவர், 22 வயதான இளைஞர் ஒருவரை கத்தியால் குத்தியுள்ளார்.

உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும், இச்சம்பவத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து, மணமகன் மற்றும் மணமகள் தரப்பினர் தப்பியோடிய நிலையில், போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்