நண்பனை கொன்ற கொலை கும்பல்....கெத்து போட்டியில் நடந்த பயங்கரம்...

x

கொல்லப்பட்டவர் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அடுத்த மெலட்டூர் வெண்ணுக்குடியை சேர்ந்த கோபி என்ற இளங்கோ. விவசாய கூலி வேலை செய்து வந்திருக்கிறார். கடந்த சில மாதங்களாக அம்மாபேட்டை பகுதியில் உள்ள அத்தை வீட்டில் வசித்து வந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று இரவு நண்பர்களுடன் மது குடித்து மஜா செய்த கோபி இப்படி கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், கோபியின் கடந்த காலத்தை புரட்டி பார்த்திருக்கிறார்கள். அப்போது தான் கோபியின் ரவுடிச வாழ்க்கை பற்றி தெரிந்திருக்கிறது கூலித்தொழிலாளி என்ற போர்வைக்குள் சுற்றித்திரியும் கோபி ஒரு ரவுடி. கொலை, கொள்ளை என பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கி சிறைக்கு சென்று வந்துள்ளார்.கோபியின் ரவுடிச வாழ்க்கையில் விட்டு வைத்த மிச்ச மீதிகள், இன்று அவரின் உயிரை பறித்திருக்க கூடுமோ என்ற சந்தேகத்தோடு போலீசார் மேற்கொண்ட விசாரனையில், கோபியின் நண்பர்களான அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த ஆனந்த பாபு, மதன், பிரவீன் ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரித்திருக்கிறார்கள்.

அப்போது தான் நடந்த அனைத்தும் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. ஆம்.... கோபியும், கைது செய்யப்பட்ட மூவரும் சேர்ந்து பல்வேறு அசால்டுகளை செய்துள்ளனர். அதில் முக்கியமானது 2020 ஆம் ஆண்டு நடந்த ராஜா கொலை.கோபி, ஆனந்த பாபு உட்பட ஆறு பேர் கொண்ட கும்பல் கள்ளக்காதல் விவகாரத்தில் சேர்மா நல்லூர் பகுதியை சேர்ந்த ராஜாவை ஓட ஓட வெட்டி கொலை செய்தது.

அந்த வழக்கில் சிறைக்கு சென்ற கோபியும், ஆனந்த பாபுவும் ஜாமினில் வெளியே வந்த பிறகும் தொடர்ந்து ரவுடிசத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தான் இருவருக்குள்ளும் ஏரியாவில் யார் கெத்து என்ற போட்டு எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி ஆனந்தபாபுடன் சேர்ந்து அசால்டு செய்வதை தவிர்த்து, தனியாக களத்தில் இறங்கி இருக்கிறார் கோபி. இவை எல்லாம் ஆனந்த பாபுக்கு ஆத்திரத்தை கிளப்பி இருக்கிறது. இப்படியே விட்டால் கோபி பெரிய தாதாவாக மாறிவிடுவான் என்ற அச்சத்தில், அவரை தீர்த்து கட்ட திட்டம் தீட்டி இருக்கிறார்.சம்பவம் நடந்த அன்று இரவு கோபியை பார்டிக்கு அழைத்து மதுபோதையில் மூழ்கடித்துள்ளனர். போதையில் திளைத்திருந்த கோபியை கொடூரமாக வெட்டி கொன்று விட்டு தப்பி சென்றது விசாரனையில் தெரியவந்திருக்கிறது. விசாரனை முடிவில் ஆனந்த பாபு, மதன், பிரவீன் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்