கொலைக்குற்றவாளிகள் சிறையில் சிம்கார்டு, செல்போன்.. அதிர்ச்சியில் புழல் சிறைக்காவலர்கள்..

x

சென்னை புழல் மத்திய சிறையில் தண்டனை பிரிவில் சிறைக்காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கொலை வழக்குகளில் கைதான கார்த்திக் மற்றும் இப்ராஹிம் ஆகிய கைதிகள் இருந்த சிறையில், ஒரு செல்போன், சிம்கார்டு, பேட்டரி இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், அவை பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து கழிவறையில் கேட்பாரற்று கிடந்த செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த 2 சம்பவங்கள் குறித்தும் புழல் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்