ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி

x

தமிழ்நாட்டில் சனாதனம், வர்ணாசிரமம் எனும் விஷச்செடிகளை வளர்க்க எண்ணி, விஷமத்தனங்களில் ஆளுநர் ஈடுபட வேண்டாம் என முரசொலி கடுமையாக விமர்சித்துள்ளது.

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் வெளியாகியுள்ள விமர்சனக் கட்டுரையில், தமிழ்நாடு எத்தனையோ ஆளுநர்களைப் பார்த்துள்ளதாகவும், சில ஆளுநர்கள் விமர்சனத்துக்கும் ஆளாகியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போதைய ஆளுநர், ஆடு திருடிய திருடன்போல், அகப்பட்டு முழிக்கிறார் என்றும், ஏன் அதிகார வரம்புகளை மீறி, ஆளுநர் கடிதங்கள் அனுப்புகிறார் என்ற கேள்வி எழுவது நியாயமானது என்றும், குறிப்பிடப்பட்டு உள்ளது. பெரியார், அண்ணா, கருணாநிதியால் பதப்படுத்தப்பட்ட மண் தமிழ்நாட்டு மண் என்றும், இங்கே சனாதனம், வர்ணாசிரமம் எனும் விஷச் செடிகளை வளர்க்க எண்ணி விஷமத்தனங்களில் ஈடுபட வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்