"இதான் கூட்டணி தர்மமா?" - சிபிஎம் தலைவரை சரமாரியாக விமர்சித்த முரசொலி

x

தொழிலாளர் திருத்த சட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2 நாட்களில் திரும்பப் பெற்றுவிட்ட நிலையில், சி.பி.எம். மூத்த தலைவர்களில் ஒருவரான டி.கே.ரங்கராஜனின் பேச்சுக்கு, முரசொலி நாளிதழ் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தை திமுக அரசு ஆட்சி செய்கிறதா? - அல்லது அதிகாரிகளும் முதலாளிகளும் சேர்ந்து ஆட்சி செய்கிறார்களா? என டி.கே.ரங்கராஜன் கூறியிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது.

திமுக அரசை அதிகாரிகள் தவறாக வழி நடத்துகிறார்கள் என்ற தவறான தகவலை டி.கே ரங்கராஜனுக்கு சொன்னது யார் ? - எதை வைத்து அவர் சொல்கிறார்? - கூட்டணியில் இருந்து கொண்டு பொதுவெளியில் கூக்குரலிடுவது தான் கூட்டணி தர்மமா? என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளது. திமுக அரசு தொடர்ந்து இருக்க வேண்டுமானால் என்று சொல்லும் தகுதியோ, யோக்கியதையோ டி.கே.ரங்கராஜன் போன்றோருக்கு இல்லை என்றும் முரசொலி நாளிதழ் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்