"ஆத்தி என்னா குளுரு.. " - மூணாறில் 3-ஆவது நாளாக ஜீரோ டிகிரி குளிர்

x

சர்வதேச சுற்றுலாத் தலமான மூணாறில், வெப்பநிலை படிப்படியாக குறைந்து 2 நாட்களுக்கு முன்பு, ஏழுமலை, தேவிகுளம் எஸ்டேட் பகுதிகளில் ஜீரோ டிகிரியாகப் பதிவானது.

இதனால் கடந்த 3 நாட்களாக பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முதியவர்களும் சிறுவர்களும் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.

பச்சைத் தேயிலை தோட்டங்கள் மெல்லிய பனியால் மூடப்பட்டு, வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கின்றன. மூணாறு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பகலில் 20 முதல் 25 டிகிரியாக வெப்பநிலைஉள்ளது.

புத்தாண்டு சீசன் முடிந்துள்ள நிலையில், மீண்டும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்று சுற்றுலாத்துறை நம்பிக்கை தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்