இலவச வண்டிக்கு லஞ்சம் கேட்ட நகராட்சி ஊழியர்..அப்பாவி முகத்துடன் உண்மையை உடைத்த வியாபாரி..

x

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சியில் தரைக்கடை வியாபாரிகளுக்கு வழங்கப்பட்ட இலவச வண்டிக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் கையூட்டு பெறுவதாக, பயனாளி கூறும் வீடியோ, சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது. பிரதமரின் ஸ்வாநிதி திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகளுக்கு வாழ்வாதார வாகனம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நகர மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன்,சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டு 11 பேருக்கு இந்த வாழ்வாதார வாகனத்தை வழங்கினார். இந்த வண்டிகளை பெற்ற பயனாளிகளிடம் ஆவணங்களுடன் நகராட்சி ஊழியர் ஒருவர் தலா ரூபாய் 2000 பெற்றதாக அப்பாவியாக கூறும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரல் ஆகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்