"முலாயம் சிங் யாதவ் விரைந்து குணமடைவார்"... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முலாயம் சிங் யாதவ் விரைந்து குணமடைவார் என முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், சமாஜ்வாடி கட்சியின் தலைவரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான முலாயம் சிங் யாதவ் உடல்நலம் குறித்து கவலை தெரிவித்துள்ளார். மேலும், விரைந்து பூரணமாக குணமடைவார் என நம்புவதாகவும் கூறியுள்ளார். 

X

Thanthi TV
www.thanthitv.com