விவசாயிகளுக்கு குட் நியூஸ் | அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

x

கரும்பு விவசாயிகளுக்கும் சிறப்பு ஊக்கத் தொகையினை விரைவில் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு 195 ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் அண்மையில் தொடங்கி வைத்தார். இந்நிலையில் வேளாண்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு 2 ஆயிரத்து 950 ரூபாய் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம், சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்