மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்விடம் எம்.பி.கனிமொழி நேரில் சென்று கோரிக்கை

x

டெல்லியில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை, திமுக எம்.பி. கனிமொழி நேரில் சந்தித்தார். அப்போது அவர், தூத்துக்குடி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலுவையிலுள்ள பல்வேறு ரயில்வே திட்டப்பணிகளை விரைந்து முடித்து தரும்படி கேட்டு கொண்டார். மும்பையிலிருந்து மதுரை வரையிலான 'லோக்மான்ய திலக் விரைவு வண்டி' தூத்துக்குடி வரை நீட்டிப்பது, மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி இடையிலான புதிய சேவை, தாம்பரம் - செங்கோட்டை இடையே வாரம் மூன்று ரயில்கள் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் கோரிக்கை விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்