கனிமொழி பங்கேற்ற கூட்டத்தில் பெண் காவலர் கதறல்... - தீயாய் பரவும் வீடியோ

x

சென்னை விருகம்பாக்கத்தில் திமுக எம்பி கனிமொழி கலந்து கொண்ட கூட்டத்தில், பெண் காவலருக்கு, இரு இளைஞர்கள் பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தசரதபுரம் பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி முடிந்த நிலையில், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த 22 வயது பெண் காவலரிடம், கூட்டத்தில் இருந்த இரண்டு இளைஞர்கள் அத்துமீறி பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது.

அந்த காவலர் கதறிய நிலையில், அங்கிருந்த போலீஸ்காரர் ஒருவர் இரு இளைஞர்களை​யும் பிடித்து விசாரித்து, சக போலீசாருடன் அவர்களை காவல்நிலையம் கொண்டுசெல்ல முயன்றார்.

அப்போது, அங்கிருந்த திமுகவினர் சிலர் போலீசாருடன் சமரச பேசி உள்ளனர். இந்த காட்சிகள் சமூகவலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்