ராமானுஜரை தரிசிக்க சென்ற ம.பி முதல்வர்... திடீரென Cut -ஆன மின் இணைப்பு - பதறிய அதிகாரிகள்

x

அடுத்த மாதம் ஆதிகேசவ பெருமாளுக்கு சித்திரை திருவிழாவும், ராமானுஜருக்கு ஆயிரத்து 6வது அவதார திருவிழாவும் நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று சிவராஜ் சிங் சவுகான் பெருமாளையும் ராமானுஜரையும் தரிசனம் செய்தார். தொடர்ந்து கோயிலின் சுற்று சுவற்றில் வரையப்பட்ட ஓவியங்களை கண்டு ரசித்து சிறிது நேரம் தியானத்தில் ஈடுபட்டார். முன்னதாக அவருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. மத்திய பிரதேச முதல்வர் வருகைக்காக ஸ்ரீபெரும்புதூர் நகர் மற்றும் கோயில் முழுவதும் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனிடையே சிவராஜ் சிங் சவுகான் ராமானுஜரை தரிசிக்க சென்ற போது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் அதிகாரிகள் பதற்றம் அடைந்தனர். உடனே ஜெனரேட்டர் மூலமாக மின் விநியோகம் வழங்கப்பட்டது. இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்