5 நாட்களுக்கு பின் மலை ரயில் சேவை... மலை ரயிலில் பயணிகள் உற்சாக பயணம்

x

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு மீண்டும் மலை ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. உதகை மலை ரயில் பாதையில் 10 க்கும் மேற்பட்ட இடங்களில் ஏற்பட்ட மண்சரிவு, பாறாங்கற்களை ரயில்வே ஊழியர்கள் அகற்றினர். பின்னர் தண்டவாளத்தை சீரமைக்கும் பணி நடைபெற்றது. தற்போது பணி நிறைவடைந்ததை தொடர்ந்து, 5 நாட்களுக்கு பின், மலை ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. மலை ரயிலில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்