சாலையில் கிடந்த பிளாஸ்டிக் கவரை கண்டு நடுங்கிய வாகன ஓட்டிகள் - உள்ளே இருந்தது என்ன?

x

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் யமுனா நெடுஞ்சாலை அருகே பிளாஸ்டிக் கவர் சுற்றப்பட்ட நிலையில் இளம்பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து பெண்ணின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பெண்ணிற்கு 20 வயது இருக்கலாம் என்றும் முகத்தில் காயங்கள் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

பெண்ணை கொலை செய்தவர்கள் யார்? பிளாஸ்டிக் கவரில் சுற்றி, வீசி சென்றது யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்