சிஎஸ்கே மேட்ச்சுகாக தாய் செய்த காரியம்..தவித்து போன 6 மாத கைக்குழந்தை - சென்னை சேப்பாக்கில் பரபரப்பு

x

சென்னையில் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று நடைபெறும் நிலையில், ரசிகர்கள் காத்திருந்தபோது, 6 மாத கைக்குழந்தை மற்றும் 2 வயது ஆண் குழந்தையுடன் மூதாட்டி ஒருவர் பதற்றமாக நின்றுள்ளார். அவரிடம் விசாரித்ததில் பெண் ஒருவர் தன்னிடம் அந்த குழந்தைகளை கொடுத்து விட்டு சென்றதாக கூறியுள்ளார். இதையடுத்து ஒலிபெருக்கி மூலம் போலீசார் அறிவிப்பு விடுத்ததால், வரிசையில் நின்று கொண்டிருந்த ஒரு பெண், தனது குழந்தை என போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து, நீண்ட நேரமாக குழந்தைகளை பசியில் தவிக்க விட்ட அந்த பெண்ணை கண்டித்து, குழந்தைகளையும் போலீசார் ஒப்படைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்