இரட்டை பெண் குழந்தைகளுடன் தாய் மர்ம மரணம்...கணவர் துபாயில் பணிபுரிந்து வரும் நிலையில் அதிர்ச்சி சம்பவம்

x

பெரம்பலூர் மாவட்டம் பெண்ணகோனம் கிராமத்தை சேர்ந்தவர் விஜய். இவருக்கும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெயா என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு இரட்டை பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வேலை நிமித்தமாக தனது சகோதரருடன் விஜய் துபாய் சென்றுள்ளார். இந்நிலையில், கணவரின் சகோதரர் மனைவி மற்றும் மாமியாருடன் வசித்து வந்த ஜெயா, திடீரென அறையில் இரு குழந்தைகளுடன் இறந்து கிடப்பதாக போலீசருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மூவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தில் பெண்ணின் கழுத்தில் காயங்கள் இருப்பதாக கூறப்படும் நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்