மகன்களுக்கு திருமணமாகாத விரக்தியில் இறந்த தாய்.. சோகத்தில் மகனும் விபரீத முடிவு -சென்னையில் பரிதாபம்

x

சென்னை, புதுவண்ணாரப்பேட்டை கிராஸ் தெருவை சேர்ந்தவர் அசோகன். இவரது மனைவி நாகேஸ்வரி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், இருவருக்கும் திருமணம் நடைபெறாததால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது போல், ஏற்பட்ட தகராறில் 65 வயதான நாகேஸ்வரி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், மன வேதனையில் இருந்த அவரது இளையமகன் விவேக், காசிமேடு மீன்பிடித் துறைமுகம் அருகே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்