திடீரென வெடித்து சிதறிய கொசு மருந்து தெளிக்கும் இயந்திரம் - ஊழியருக்கு பலத்த தீக்காயம்

x

கொசு மருந்து தெளிக்கும் இயந்திரம் வெடித்து விபத்து ஏற்பட்டதில் பேரூராட்சி ஊழியருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியைச் சேர்ந்தவர் வெங்கடாஜலபதி. பேரூராட்சி ஊழியரான இவர், 2-வது வார்டில் கொசு மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, அந்த இயந்திரம் வெடித்ததில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து, அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கொசு மருந்து தெளிக்கும் இயந்திரங்களை, பேரூராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்கவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்