மின் இணைப்பில் ஏற்பட்ட மின்கசிவு.. புகையில் சிக்கி மூச்சு திணறிய பயணிகள்.. மாஸ்கோ மெட்ரோ ரயில் நிலையத்தில் பரபரப்பு

• ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் திடீரென புகை சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. • இதனால் பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். • மின் இணைப்பில் ஏற்பட்ட மின்கசிவால் புகை பரவியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. • இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்றும், சிலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் கூறி உள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com